Total Pageviews

அணித் தலைமையில் மாற்றமில்லை; 2019 வரை மெத்தியூஸ் தான்...

Written By We Are Anonymous on Friday, January 20, 2017


இலங்கைக் கிரிக்கெட் அணித் தலை­மையில் எவ்­வித மாற்­றமும் தற்­போது ஏற்­ப­டாது என்றும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை அஞ்­சலோ மெத்­தி­யூஸே தலை­வ­ராக நீடிப்பார் என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

நேற்று கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தென்­னா­பி­ரிக்­காவில் இலங்கை அணி அடைந்த படு­தோல்­விக்கு அணித் தலை­வரின் பொறுப்­பற்ற தலை­மையும் ஒரு கார­ணம்­தானே. அதனால் தலை­வரை மாற்றும் நோக்கம் ஏதும் இருக்­கி­றதா என்று திலங்க சும­தி­பா­ல­விடம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் பதி­ல­ளிக்­கையில், தென்­னா­பி­ரிக்­காவில் இலங்கை அணி அடைந்த தோல்­வியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு எந்த கார­ணமும் கூற முடி­யாது என்­பதை நானும் ஏற்­றுக்­கொள்­கிறேன்.

போட்டி ஒன்­றையோ போட்டித் தொட­ரையோ தோற்­பதில் எதுவித பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் இது­ போன்ற படு­தோல்வி அடை­வதை நாம் அனு­ம­திக்க முடி­யாது என்றார்.

அப்­ப­டி­யானால் அடுத்து என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் என்று கேட்­ட­தற்கு பதி­ல­ளித்த தேர்­வுக்­குழுத் தலைவர் சனத் ஜய­சூ­ரிய, போட்டி நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கும்­போது வீரர்கள் குறித்தோ தலைமை குறித்தோ விமர்­சிப்­பது சரி­யல்ல. 

ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 தொடர் முடிந்ததும் இதுபற்றி முடி வெடுப்போம்.இந்தத் தொடரையும் இழந்தால் ஏதாவது மாற்றம் நிச்சயம் வரும் என்றார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.