ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், பெண்களின் கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது..
lபாட்னா: நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவர் சரத் யாதவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் யாதவ், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயர்ந்த கவுரம் வாக்குரிமை மட்டுமே. அத்தகைய வாக்குகளை பணத்துக்காக மக்கள் விற்கக்கூடாது. நம் நாட்டு பெண்களின் மானத்தைக் காட்டிலும் வாக்குரிமையே உன்னதமானது.






