நாட்டில் இன்று முதல் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம், வடக்கு வடமத்தியமாகாணம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.






