Total Pageviews

ரவூப் ஹக்கீம் என்னைப் பின்­தொ­டர்ந்து என் வீட்­டுக்கு வந்து ‘ என்னை மன்­னித்து விடுங்கள் என்று கூறினார்.

Written By We Are Anonymous on Tuesday, February 14, 2017

 கடந்த 11ஆம் திகதி இரவு நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்திலிருந்து நான் வெளி­யே­றி­யதும் கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைப் பின்­தொ­டர்ந்து என் வீட்­டுக்கு வந்து ‘ என்னை மன்­னித்து விடுங்கள். பல சந்­தர்ப்­பங்­களில் நான் உங்கள் மனதைப் புண்­ப­டுத்தி விட்டேன் என்றார். அரை மணித்­தி­யாலம் அவ­ரது முகத்தைப் பார்க்­கா­மலே இருந்தேன். பின்பு லீடர் நீங்கள் திரும்­புங்கள். நான் ஓய்வாக இருக்க விரும்­பு­கிறேன் என அவரை அனுப்பி வைத்தேன்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், செய­லாளர் பத­வி­யுடன் தேசியப் பட்­டி­யலில் உறுப்­பினர் பத­வி­யையும் தரு­வ­தாக பல தட­வைகள் வாக்­கு­றுதி வழங்­கிய கட்­சியின் தலைவர் என்னை ஏமாற்­றி­விட்டார். கடந்த பேராளர் மாநாட்டின் நிய­ம­னங்­க­ளுடன் எனது 30 வருட அர­சியல் வாழ்க்­கைக்கு முடி­வு­கட்­டப்­பட்­டுள்­ளது. தவி­சாளர் பத­வியை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு தலைவர் மற்றும் உயர்­பீட உறுப்­பி­னர்­களால் என்­னிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. விந­ய­மாகக் கேட்­கப்­பட்­டது. ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பறித்­தெ­டுத்து தரும் பத­வியை ஏற்­றுக்­கொள்ளும் வழி­கெட்ட ஆள் நான் இல்லை எனக்­கென்று தனித்­துவம் உள்­ளது. எனது தனித்­து­வத்தை எவ­ருக்கும் அடகு வைக்க மாட்டேன். தவி­சாளர் பத­வியை கடை­சி­வரை ஏற்­றுக்­கொள்ள மாட்டேன் என்றேன். சமூகத்தையும் கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் என்ற துஆ கேட்கிறேன் என்றார். ( D C )
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.