Total Pageviews

முஸ்லிம் அமைச்சர்கள் தேவை இல்லை! இது சிங்கள நாடு! சிங்களவர்களே ஆள வேண்டும்! மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் பொதுபலசேனா!

Written By Mihrajnews on Tuesday, October 10, 2017

முஸ்லிம் அமைச்சர்கள் தேவை இல்லை!
இது சிங்கள நாடு!
சிங்களவர்களே ஆள வேண்டும்!

மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் பொதுபலசேனா!

இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இன்று நன்பகல்  பொது பல சேனாவின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று இந்த நாட்டில்சிறுபான்மை மக்களுக்கான  உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளாதாக கூறி புதிய ஒரு அரசியலமைப்பை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.அரசியலமைப்பு என்பது எமது சந்ததியினரின் எதிர்காலம் அதனை அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்ற தேவையில்லை.

இன்று இந்த நாட்டில் அதிகாரம் மிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.கபீர் ஹசீமுக்கு 75 நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன.ரிஷாத் பதியுதீனுக்கு 40 க்கும் அதிகமான நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக அதிகாரத்தில் அவர்களே உள்ளனர். பிறகு ஏன் அதிகாரம் வழங்க கோருகிறார்கள்.

நாம் விரைவில் கபீர் , ரிஷாத் விக்னேஷ்வரன் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தொடர்பில் கேட்க உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

எமக்கு எந்த கட்சியும் அவசியமில்லை நாம் நாட்டு நலனுக்காக குரல் கொடுக்கிறோம்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.